Tuesday, April 21, 2015

மிதிவண்டி பயணம்



நான் தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரமது. எனது அப்பாவின் மிதிவண்டியில் அன்றாடம் பயணம் செய்வது வழக்கம் .நாங்கள் வசித்த வீடு 30 நிமிட தொலைவில் இருந்தபடியால் களைப்பு தெரியாமல் இருபதற்காக ஏதாவது பேசியபடியும் ,விளையாடியபடியும் செல்வது வழக்கம் .நானும் என் அண்ணனும் பின் இருக்கையிலும் என் தங்கை முன் இருக்கையிலும் பயணிப்போம் .

சாலையில் இருபுறங்களிலும் இருக்கும் அரிசி மண்டிகளின்  பெயர்களை சரியாக சொல்லவேண்டும் . இது ஒரு விளையாட்டு .கண்களை மூடிக்கொள்ள வேண்டும் சிறிது நிமிடம் கழித்து எங்கள் அப்பா எங்களிடம் நாம் எங்குவந்து கொண்டிருக்கிறோம் என்று கேட்பார் யார் சரியாக யூகிக்கிறார்களோ அவருக்கே வெற்றி . சிலசமயம் திருக்குறள் சொல்லியிருக்கிறோம் ஏன் சிலசமயம் சினிமா பாடல்களையும் பாடுவோம். மிகவும் மகிழ்ச்சியான மனதில் எந்த கவலையும் இல்லாத தருணம் அது . 

விளையாட்டு ஆர்வத்தில் வண்டிச்சக்கரத்தில் காலை விட்டு  அழுத கதையும் உண்டு.வலது புறம் திரும்பும் பொழுது கை காட்டி சிக்னல் செய்ய வேண்டும் அதற்கும் எங்களுக்குள் போட்டி உண்டு. ஒரு முறை என் தம்பியுடன் பயணிக்கும் போது திரும்பும் சாலை வந்தவுடன் கையை காட்டு  என்று அப்பா கூற ஒன்றும் புரியாமல் அவன் முழித்திருக்கிறான். கையை காட்டு என்று மீண்டும் கூற என் அப்பாவின் முகத்திற்கு நேராகக்  கையைக் காட்ட,என் அப்பாவே சுதாரித்து திரும்பி விட்டார். இன்றும் அதை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்.
 
ஒரு நாள் ஒரு புதிய விளையாட்டை (போட்டியை ) அப்பா அறிமுகப்படுத்தினார் . மூன்று தெருக்கள் இருந்தது எந்த வழியில் சென்றாலும் எங்கள் பள்ளியை அடையலாம் . எந்த தெருவில் திரும்பப்போகிறோம் என்று யூகிக்கவேண்டும் . நானும் என் அண்ணனும் எங்கள் யூகங்களை பகிர்ந்து கொள்வதுண்டு ஆனால் என் தங்கை முன்னிருக்கையில் அமர்வதால் மனதிலே வைத்துக்கொள்ளவேண்டி இருந்தது. சிலசமயம் நானும் சில சமயம் என் அண்ணனும் ஜெயிப்போம் ஆனால் என் தங்கை மட்டும்  எல்லா சமயமும் ஜெயித்ததால் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது .

இங்கு என் தங்கையைப் பற்றி ஒரு விஷயம் கூறியே ஆக வேண்டும். என் தந்தையின் வலதுகை அவள் . அவருக்கு எல்லா உதவிகளையும் செய்வாள் . அவரின் உடமைகளை அவள் வசமே வைத்திருப்பாள் . அவரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதே அவளின் குறிக்கோளாக இருந்தது அதில் வெற்றியும் கண்டிருந்தாள். இதனால் என் தங்கை ஏமாற்றுவதாக நாங்கள் வாதிட்டோம் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே இவ்வாறு  செய்வதாக நகைத்தோம். ஆனால் அவள் மறுத்தாள் . இன்று வரை அது எங்களுக்கு ஒரு புதிராகவே  இருக்கிறது.
       
இயந்திரத்தனமான  இன்றைய  சூழலில், நம் குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதற்காக நேரத்தை தேடும் முயற்சியில் அன்றாடம் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடுகிறோம். ஒரு  எளிய வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தர மறந்து விடுகிறோம் . மிக பரபரப்பான  சூழலிலும் எவ்வாறு அமைதியாக இருப்பது என்பதுதான் அது . எங்கள் பள்ளியில் இருந்து 30 நிமிட பயணத்தில்  எங்கள் தந்தையின் அலுவலகம் இருந்தது . பணி நிமித்தமான உளைச்சலை ஒருபோதும் எங்களிடம் காட்டியது இல்லை. பள்ளியின் கவலைகளை மறந்து  நாங்களும் விளையாடினோம் .

சிறு  சிறு விளையாட்டுகளின் மூலம் நாம் நம் குழந்தைகளின் தோழர்கள் ஆக   மாறிவிடுகிறோம் என்பதை மறுக்க முடியாது . எங்கள் கல்லூரிப் படிப்பு முடியும்வரை எங்கள் தந்தையுடன் நானும் என் தங்கையும் பயணித்தோம் . மிதிவண்டி இருசக்கர வாகனமாக மாறியது ஆனால் மாறாதது எங்கள் தந்தையுடனான எங்கள் நட்பு , என் தங்கையும்தான்!!!அவளைப் போன்று பெற்றோர்களின் கவனத்தை பெற இன்றைய சிறார்கள் முயல்வதும் இல்லை அதற்கான நேரமும் அவர்களிடம் இல்லை !!!

Sunday, February 22, 2015

கனவுக்கோப்பை

இரண்டு நாட்களுக்கு முன்பு... பள்ளியிலிருந்து திரும்பிய எனது ஒன்பது வயது மகள் கேட்ட  கேள்வி -  "நீங்கல்லாம் சின்ன பிள்ளையா இருக்கும் போது ஹாக்கி தான் பாப்பீங்களா?!"

இல்லையே..ஏன்டா கேக்குற?!

 "இன்னைக்கு P.E பீரியட்- ல ஹாக்கி விளையாடினோம்..அது India's நேஷனல் கேம்ன்னு டீச்சர் சொன்னாங்க...அதான்" என்றாள். அவளுடைய கேள்விக்கான பதில் இதோ இங்கே...   

நம் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் நம்மில் பல பேருக்கு பிடித்த விளையாட்டு "கிரிக்கெட்" தானே?!. அதுவும்  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து விட்டது என்றால் கேட்கவா வேண்டும்... இதுவரை கவனிக்காதவர்கள் கூட உற்று நோக்கத் துவங்கிவிடுவார்கள். ஆர்வம் இல்லாதவர்களுக்குக் கூட ஆர்வம் தொற்றிக்கொண்டுவிடும்  காய்ச்சல் போல. இன்று வருடம் முழுதும் I.P.L என்ற பெயரில் பல சேனல்களில் கிரிக்கெட் ஒளிபரப்பாகிறது. விரும்பினால் பார்க்கலாம் இல்லையென்றால் சேனலை மாற்றிவிடலாம்.

   பல வருடங்களுக்கு முன் பெரும்பாலான வீடுகளில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலம். ஒரு சில கிரிக்கெட் தொடர்கள்   மட்டுமே ஒளிபரப்பாகும். விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அதைத்தான் பார்க்கவேண்டும்.அவ்வாறு கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்களும் உண்டு.

பல தாய்மார்களுக்கு கிரிக்கெட் எதிரியாக இருந்தது . "முழுப்பரிட்சை வருது இப்போ போய் கிரிக்கெட் போட்றான் நல்லா மார்க்கு வாங்கின மாதிரிதான்" என்று புலம்புவார்கள். என் கணவர் கூட அடிக்கடி கூறுவார் எனக்கு பிளஸ் 2ல் மார்க் கொறஞ்சதுக்குக் காரணமே கிரிக்கெட் தான் என்று. வெள்ளி,ஞாயிறுகளில் கிரிக்கெட் என்றால் ஒளியும் ஒலியும் போச்சே, படம் போச்சே என்று புலம்பி கிரிக்கெட்டையும் தூர்தர்சனையும் கரித்துக் கொட்டிய தாய்க்குலங்களும் உண்டு !!!

     எங்கள் வீட்டில் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு  கிரிக்கெட் வீரரை பிடிக்கும் அதனால் தங்களுடைய "ஹீரோ" நன்றாக விளையாட வேண்டும், "Man Of The Match" ஜெயிக்க வேண்டும் என்று எங்களுக்குள் போட்டி. அவர் கேப்டன் ஆக இருக்கும் பட்சத்தில் "Presentation Area" கண்டிப்பாக பார்க்க வேண்டும்.அவர்கள் பேசும் ஆங்கிலம் அறை குறையாகப் புரிந்தாலும் அதிலும் ஆனந்தமே. சில சமயம் செய்திகளுக்கு நேரமாகிவிட்டால் "Presentation Ceremony"-யை போட மாட்டார்கள். தூர்தர்ஷனை திட்டித் தீர்த்துவிடுவோம். மறுநாள் பள்ளியில் நண்பர்களுடன் டிஸ்கஸ் செய்ய வேண்டுமே!!!! இன்றுபோல் replay எல்லாம் கிடையாது .கிரிக்கெட் நாளில்"total off " என்று கரண்ட் கட் என்றால் அழுகையே வந்துவிடும். Whats-app ல் ஸ்கோர் தெரிந்து கொள்ளும் வசதி கிடையாது.

     உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதற்கான அட்டவணை, கிரிக்கெட் வீரர்களின் சாதனைகள் அடங்கிய Sports Supplementary செய்தித் தாள்களில் வெளிவரத்  துவங்கிவிடும். கிரிக்கெட் வீரர்களின் ப்ளோ -அப்  புகைப்படங்களும் அதில் அடக்கம். இங்கு எங்கள் வீட்டில் செய்தித்தாள் விநியோகம் செய்தவரைப் பற்றிச்  சொல்லியே ஆக வேண்டும்.பள்ளி செல்லும் முன் பேப்பர் (சினிமா துணுக்கு) படித்துவிடலாம் என்றால் முடியவே முடியாது. பேப்பர் லேட்டாகவே வரும். கவனமாக இணைப்புகளை தவறவிட்டு விடுவார். நானும் என் தங்கையும் மாறி மாறி சண்டை பிடித்தாலும் "அப்படியா..... இல்லையா?" என்று ஒற்றை வார்த்தையை மட்டுமே உதிர்க்கும் "Cool" ஆன மனிதர்.

     அன்று என் விருப்ப வீரரின் "ப்ளோ-அப்" வரும் நன்னாள். வழக்கம் போல் இணைப்பு இல்லை. நானும் என் தங்கையும் இன்று அவரை ஒருகை பார்த்து விடவேண்டும் என்று வாசலிலே உட்கார்ந்து விட்டோம். பேப்பர் விநியோகம் முடிந்து வீடு திரும்பும் அவரை வழிமறித்து சண்டை பிடித்தோம். அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை. என்ன போட்டோ? யாரு போட்டோ? என்று இன்னொரு நாளிதழை எங்களிடம் கொடுத்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டார். அதற்குப் பின் அவரிடம் சண்டைப் போடக் கூடாதென்று கூட்டுத்தீர்மானம் நிறை வேற்றிவிடோம். எங்கள் வீட்டு அலமாரியை  பல கிரிக்கெட் வீரர்களின் ஸ்டிக்கர்கள்  அலங்கரித்த காலம் அது!!!

        கிரிக்கெட் போட்டி நடை பெறும் நாளில் முதல் பாதி ஆட்டம் முடிந்த தருவாயில் தெருக்களில் நடந்த அனுபவம் உங்களுக்கு உண்டென்றால் நான் சொல்லப்போவதை நீங்களும் நன்கு அறிந்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக நின்று பேசும் பள்ளிச் சிறுவர்களையும் அவர்களின் உரையாடல்களையும் நீங்கள் கவனிக்காமல் செல்லவே  முடியாது .

"Full Toss  ball ஆ  போட்டுட்டான்டா, சூப்பரா அடிச்சிருக்கலாம்டா, விட்டுட்டான் Bold ஆயிருச்சு"

"மோசமான பீல்டிங்டா, ஈசி கேட்ச் எல்லாம் விட்டுட்டான், Four, Six  ன்னு வெளுத்துட்டான்".

     தாங்கள் ஏதோ பயிற்சி பெற்ற வீரர்கள் போலவும், பல போட்டிகளில் பங்கேற்றது போலவும் அவர்கள் பேசுவது சுவையாகவே இருக்கும். பேசும் போது அவர்கள் கண்களில் தெரியும் ஆர்வம், கனவிற்கு எல்லையே கிடையாது. போட்டியில் இந்தியா ஜெயித்து விட்டால் நாம் தெருக்களில் நடக்கவே முடியாது ஏனென்றால் அவர்களின் ஆட்டம் தொடங்கிவிடும்.பந்து பல திசைகளில் பறக்கும். பல தாத்தா, பாட்டிகளின் வசவுகளுக்கு உள்ளாவார்கள். தோற்றுவிட்டால் கலை  இழந்த முகங்களுடன், என்ன தவறு செய்தார்கள் என்ற விவாதங்கள் தொடரும். சரியாக விளையாடாத வீரர்களுக்கு ஒரு சில "பட்டங்களும் "  கிடைக்கும். அம்பயர்களும் தப்ப முடியாது.

     சில பல முறை கிரிக்கெட், சூதாட்ட சர்ச்சையில் சிக்கினாலும் அதன் மேல் இருக்கும் மோகம் மட்டும் இன்றும் குறையவில்லை. கிரிக்கெட் சேனல் வாங்க போறேன் என்ற என் கணவரிடம் "நான் எல்லாம் பார்க்க மாட்டேன்", "Interest போயிருச்சு", "வயசாயிருச்சு" என்று வெட்டி ஜம்பம் பேசினாலும்  இந்திய வீரர்கள் நமது வரவேற்பறையில் (டிவி) விளையாடுவதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் உணர்வுகள் என்றும்  மாறுவதில்லை என்பது இதுதானோ?  ஒருவேளை என்னுள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  அந்தப் பள்ளிப் பெண்தான் என்னைப்   பார்க்கத் தூண்டுகிறாளோ?(!)


       

Wednesday, November 19, 2014

மஞ்சள் நிறமே ......மஞ்சள் நிறமே

  வாசல்  கதவு  திறக்கும் சத்தம் கேட்டது. நிதர்சனா வரவேற்பறையை நோக்கி விரைந்தாள்.உள்ளே நுழைந்த அம்மாவின் கையிலிருந்த துணிப்பையை வாங்கி ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்தாள்.100 வாட்ஸ் பல்பைப் போல் பிரகாசமாக இருந்த அவள் முகம் ஒளியிழந்தது.

என்ன ஆச்சு?அவளைக் கவனித்த அம்மா கேட்டாள்.

தைத்து வந்திருந்த தனது புதிய சுடிதாரை நோக்கியபடி"நல்லா தச்ச மாதிரி தெரியலயே!?!?"என்றாள் நிதர்சனா.

சும்மா பாத்தா எப்படி தெரியும்? போட்டுப் பாரு,என்றாள் அம்மா.

நாளைக்குப் போட்டுகிறேன் என்று ஆர்வமின்றி பதிலளித்தாள்  அணிந்தால் அழகாகத்தான் இருக்கும் என்ற சிறு நம்பிக்கையோடு படுக்கைக்குச் சென்றாள் நிதர்சனா.

ஒரு சுடிதாருக்குப் போய் ஏன் எவ்வளவு ஏமாற்றம்? என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.இதற்கு விடை அறியவேண்டுமென்றால் இரண்டு வாரத்திற்கு முன்பு நிதர்சனாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள  வேண்டும்(ஏறுங்கள் டைம் machine  ல் அறிந்து கொள்ளலாம் ).

 குளித்து முடித்து கல்லூரிக்கு கிளம்பும் அவசரத்தில் தலை பின்னிக்கொண்டிருந்தாள் நிதர்சனா.அம்மா அப்பாவிடம் பேசுவது காதில் விழுந்தது. மறு நிமிடமே  அவளின் அகமும்,முகமும் மலர்ந்தது.

இன்னைக்கு சாயிங்காலம் கடைத்தெருவுக்கு போய் நிதர்சனவுக்கு இரண்டு சுடிதார் வாங்கிட்டு வந்திர்றோம்.ஆடித் தள்ளுபடி போட்டிருக்கான் என்றாள் அம்மா.இன்று எப்படியாவது தனது மனதில் இருக்கும் பல நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள் நிதர்சனா.

மூன்று மாதங்களுக்கு முன்பு தனது senior அணிந்திருந்த வெளிர் மஞ்சள்,எலுமிச்சை நிற சுடிதாரைப் பார்த்ததும் தானும் அதே போல்  அணிய வேண்டும் என்ற ஆசை  அவளுக்கு உருவானது.

கல்லூரிக்குச் சென்று  தோழியிடம் தனது மகிழ்ச்சியைப்  பகிர்ந்துக் கொண்டாள். material வாங்கி கரெக்டா தச்சுப் போட்டாதான் அழகா இருக்கும் என்றும் (readymade  dress  தான் பொதுவாக வாங்குவர்.அது தொள தொள என்று இருக்கும்) உனக்கு அந்த கலர் சூப்பரா இருக்கும் என்றும்  எறியும் ஆசைத் தீயில் எண்ணையை ஊற்றினாள் தோழி.அன்று முதல் இந்த சந்தர்பத்திற்காக காத்திருந்தாள்.

நினைத்தவுடன் ஷாப்பிங் செல்லும் வழக்கம் அப்போது (15 வருடங்களுக்கு முன்பு )இல்லை.window shopping செய்ய அடுக்கு மாடி வணிக வளாகங்களும்(maal) இல்லாத காலம் அது.குடும்ப நிலையை உணர்ந்து குழந்தைகளும் நடந்து கொண்டனர்.

பள்ளிக்குச்  செல்லும் குழந்தைக்களுக்கு(தினமும் சீருடை அணிவதால்) வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தீபாவளிக்கு புது உடைகளை வாங்குவர் நடுத்தரவர்கத்தினர்.வசதி படைத்தவர்கள் இரண்டு முறை வாங்குவர் அதற்கு மேல் கிடையாது.நிதர்சனா இளநிலை இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தாள்.கல்லூரிக்கு அணிந்து செல்ல உடைகள் வேண்டும் என்பதால் மட்டுமே இந்த extra ஷாப்பிங்!!!

 மாலையில் கல்லூரி முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்லாமல் நேராக  கடைத்தெருவில் அம்மாவை சந்தித்தாள்.அம்மாவிடம் தனது ஆசையைக் கூறினாள்.சரி பார்க்கலாம், என்றாள் அம்மா.முதல் கடையில் நுழைந்தார்கள்.கடைக்காரர் பேசுவதற்கு முன்,லெமன் கலரில் சுடிதார் மெடிரியல் பார்க்கனும் என்றாள் நிதர்சனா.

yellow கலர் தான் வேணுமா? என்றார் கடைக்காரர்.

ஆம் என்பது போல் தலையாட்டினாள் நிதர்சனா.

இரண்டு.மூன்று மெடிரியல் காண்பித்தார் .இது டார்க்கா இருக்கு light yellow வேணும் என்றாள்.உங்களுக்கு டார்க் கலர் நல்லா இருக்கும் என்று பதினைந்து இருபது  மெடிரியல்களைக் காண்பித்தார்.அம்மா துணிகளின் தரத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.நிதர்சனாவின் மனது எதிலுமே லயிக்கவில்லை.

என்னடி? என்றாள் அம்மா.மௌனமாக அமர்ந்திருந்தாள் நிதர்சனா.

துணி நல்லாயிருக்குதே என்ற அம்மாவிடம் கலர் பிடிக்கலம்மா.என்றாள்.ஒன்னு வாங்கிக்கோ அடுத்த கடையில தேடலாம் என்ற அம்மாவின் வார்த்தையை அரை மனதோடு கேட்டுக்கொண்டாள்.

அடுத்த கடை ஏறினார்கள்.

அக்கா light yellow,lemon கலரில் சுடிதார் மெடிரியல் காமிங்க என்றாள்.

அவர் எடுக்கும் முன் அவளே, நான் காமிகிறத மட்டும் எடுங்க என்று சிலவற்றை சுட்டிக் காட்டினாள்.கலர் ஒத்து வந்தது ஆனால் design பிடிக்கவில்லை.அடுத்த கடையை நோக்கி நடந்தனர்.

நீங்க சொல்ற டிசைன்,கலர் மூணு மாசத்துக்கு முனாடி வந்தது.இப்ப வர்றதில்லை என்றனர்.அம்மாவும் பொறுமை இழந்தாள்.

படி ஏற முடியலடி நீயே அடுத்த கடைக்கு மேலே போ,நான் வெளிய நிக்கிறேன்.என்றாள் அம்மா.

நிதர்சனாவுக்கோ பசி,அசதி.அனைத்திற்கும் மேல் ஏமாற்றம்.உற்சாகம் வறண்டு விட்டது.கண்களை முட்டிக்கொண்டு கண்ணீர் எட்டிப்பார்த்தது.அம்மாவிடம் இருந்து மறைக்க முயன்றாள்.எங்கே தன் ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று நினைத்தாள்.தான் நினைத்த ஒன்று கூட நடப்பதில்லை என்று கடவுளை மனதில் திட்டித் தீர்த்தாள்.

நீங்க சொல்ற மெட்டிரியல் அந்த கடையில் தான்  கிடைக்கும் என்று கடையின் பெயரை அடுத்த கடைக்காரர் கூறினார்.

அந்த கடையில பார்போம் இல்லன்னா வேற வாங்கிக்கோ,நேரமாகுது அப்பா வந்திருப்பார் வீட்டுக்கு போகணும்.அம்மாவின் கவலை அம்மாவிற்கு.கடையை அடைந்தனர்.வழக்கம் போல் விவரித்தாள் நிதர்சனா.
பத்து நிமிட தேடலுக்குப் பிறகு அவள் நினைத்த கலரில் நல்ல டிசைன் கிடைத்தது.அப்பா... கிடைச்சிருச்சா என்றாள் அம்மா.மகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு அகமகிழ்ந்தாள்.

எங்க தைக்க குடுக்கிறது? அம்மாவிடம் வினவினாள்.

தூரத்து உறவினர் ஒருவர் நன்றாகத் தைப்பார் என்றும் அதிகம் தையல்  கூலி
கேட்கமாட்டார் என்றும் அம்மா கூறினாள்.இருவரும் வீட்டை நோக்கி விரைந்தார்கள் .

இன்றைய கால கட்டத்தில் மேற்கத்தைய உடைகளை மட்டும் அல்ல அவர்களின் ஷாப்பிங் உக்திகளையும் நாம் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.வருடம் முழுவதும்(சிதோஷன நிலைக்கேற்ற) உடைகள் வாங்குவது அவர்களின் தேவை . sale,deal,black friday,கிறிஸ்துமஸ் என்று ஷாப்பிங் நீண்டு கொண்டே செல்கிறது.

தேவையானவற்றை வாங்கவே பல முறை யோசித்த நாம் இன்று விலை மலிவு(deal ) என்று  கடைகள்  கூவுகின்றன என்பதற்காகவும்,நண்பர்களை ஒத்த உடை அணிய வேண்டும் என்பதற்காகவும்  தேவையில்லாத பலவற்றை தேவைப்படும் என்ற எண்ணத்தில் வாங்கிக் குவிக்கிறோம்.காலநிலை மாற்றமே இல்லாத நம் நாட்டில் இத்தனை உடைகள் தேவையா? என்று யோசிக்க வேண்டும்.ஆனால் இன்றும் பல நிதர்சனாக்கள் ஆசையோடு சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்  என்பதையும் மறுக்க இயலாது.

என்ன... புது டிரஸ் நிதர்சனாவுக்கு சரியாக பொருந்தியதா? அவள் ஆசை நிறைவேறியதா? என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிந்து விட்டது.அந்த முடிவை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்!!!!!இனி உங்கள் பாடு...நிதர்சனாவின் பாடு !!!!





Wednesday, October 29, 2014

புகுந்தவீடு

            மழை இடைவிடாது தூறி கொண்டிருந்த மதிய வேளை.முதன் முதலாக கணவருடன் இந்த அந்நிய தேசத்தில் காலடிஎடுத்து வைத்தாள் அவள் .நியூயார்க் நகர விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.ஒருமணிநேரமாவது "immigration" ல் நிற்க வேண்டும்,கணவன் கூறினான்.விமானத்தில் உட்கார்ந்து, உட்கார்ந்து  அலுத்துப்போன அவளுக்கு நிற்பது பெரிய கஷ்டமாகப்படவில்லை.சுற்றும் முற்றும் பார்வையை சுழலவிட்டாள்.எத்தனை விதமான(நிறமான ) மனிதர்கள்.வெளிநாட்டவர்கள் பற்றி மனதில் வரைந்து வைத்திருந்த ஓவியம் கலைந்தது.

     வெள்ளைக்காரனுக்கு செம்பட்டை முடி தானே இருக்கும்? என்று கணவனிடம் வினவினாள்.

யாரு சொன்னாங்க? கணவன் கேட்டான்.

             கிரிகெட் ல தான் பார்த்தேன் என்றாள். யாருக்கெல்லாம் "blond " என்று சொல்லக்கூடிய செம்பட்டை முடி இருக்கும் என்று கணவன் பெரிய விளக்கம் கொடுத்தான்.immigration முடிந்தது.லிமோசின் என்ற  பெரிய காரில் பயணமானார்கள்.நியூயார்க் நகரின் வானளாவிய கட்டடங்களையும்,மேம்  பாலங்களையும் கணவன் வியந்து விவரித்து கொண்டேவந்தான்.அவள் வாயைப் பிளந்து தூங்கிக் கொண்டேவந்தாள்.என்ன செய்வது "ஜெட்லாக்".

......

          ஒன்றரை மணிநேர தூக்கத்திற்குப் பிறகு அவர்கள் வீடு வந்தது.மழை விட்ட பாடில்லை.கண்ணில் பட்டவர்கள் எல்லாம் மிகவும் சிநேகத்துடன் புன்னகைத்து, hi how are you? என்றார்கள்.weather is really nice என்று பேசிக்கொண்டார்கள் ஆனால் அவளுக்கோ  குளிரடித்தது.என்ன குளுருதா ?winter  வந்தால் தெரியும் என்று பயமுறுத்தினான் கணவன்.அவள் கணவரின் நண்பர்களும் உடன் வேலை பார்ப்பவர்களும் நிறைந்த குடியிருப்பு என்பதால் பல  இந்திய முகங்கள் தென்பட்டன.இரவு உணவும் அவர்களே கொடுத்தனர்.தூக்ககலக்கத்தில் எதுவும் சாப்பிடமுடியவில்லை.

            மறுநாள் காலையில் மற்றொரு நண்பரின் துணையோடு பால் வாங்கி புது வீட்டிற்கு குடிபுகுந்தார்கள்.சொந்தமாக கார் இல்லாததால் நண்பர்களோடு வால்மார்ட் என்ற கடைக்குச் சென்றார்கள்.வழி தவறாமல் இருக்க கணவரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.நண்பரின் மனைவி microwave safe,dishwasher safe என்று ஏதோ புரியாத பாசையில் பேசி பாத்திரங்களை வாங்கிக் கொடுத்தார்.Indian Grocery stores ல் அரிசி,பருப்பு இத்யாதிகளை வாங்கிக்கொண்டு வீட்டை அடைந்தார்கள் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டியிருப்பதால் அன்றிரவு அவளுடைய மணாளன் மிகமுக்கியமான  "பத்து கட்டளைகளை" பிறப்பித்தான்.அவையாவது 


  •  எக்காரணம் கொண்டும் 911 என்ற எண்ணுக்கு போன் செய்துவிடாதே.போலீஸ்காரன் வந்துவிடுவான்.
  • போனை  சன்னலருக்கு அருகில் வை அப்போதுதான் சிக்னல் கிடைக்கும்.
  • எதை சமைத்தாலும் exhaust fan போட்டுக்கோ இல்லை என்றால் fire alarm அடித்துவிடும்.
  • வீட்டில் அலாரம் அடித்தால் பேப்பர் கொண்டு fire alarm ல்  விசிறி விடு  நின்று விடும்.
  • வெளியில் அலாரம் அடித்தால் வீட்டை பூட்டாமல் சாவியை எடுத்துக் கொண்டு பாஸ்போர்ட் இருக்கும் bag ஐ தூக்கிக்கொண்டு வெளியில் சென்று நிற்கவேண்டும்.elevator வழியாக போகக் கூடாது.படியில் இறங்கு.
  • யார் கதவைத் தட்டினாலும் யாரென்று பார்த்த பின் கதவைத் திற.
  • சாவி இல்லாமல் வெளியில் சென்று விடாதே உள்ளே வரமுடியாது.
  • தண்ணிரை bath  tub ஐ தவிர வெளியே எங்கும்  கொட்டிவிடாதே.
  • மிகமுக்கியமான ஒன்று மதியம் தூங்கிவிடாதே...ஜெட் லாக் போகவேபோகாது .
அன்றிரவு அவள் கணவன் நன்றாக தூங்கிவிட்டான்.ஆனால் அவளுக்குத்தான் தூக்கம் வரவில்லை ஜெட் லக் ஆ இல்லை பயமா என்று தெரியவில்லை வயிற்றை கலக்கியது.
.......


    மறுநாள் காலைஉணவு  cereal சாப்பிட்டுவிட்டு கணவன் அலுவலகம் சென்றுவிட்டான்.காலையில் போய் எப்படித்தான் இந்த இனிப்பு cereal ஐ சாப்பிடுகிரார்களோ? என்று அங்கலாய்துக்கொண்டே மதியத்திற்கு சமைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.சுவை நன்றாகவே இருந்தது ஆனால் அம்மா சமைத்தது போல் இல்லையே ?மனம் அம்மாவையும் பிறந்த வீட்டையும் தேடத் தொடங்கியது.

டிவி இல்லை,இன்டர்நெட் இல்லை வீட்டில் ஒரே அமைதி.மேல்வீடுக்காரன் நடக்கும் சத்தம் மட்டும்  அவ்வப்போது எழுந்து அவள் தனிமையை போக்கியது.சொந்த மண்ணில் கிடைக்காத அமைதி ஆனால் மனம் அதை விரும்பவில்லை .கணவன் கொடுத்து விட்டுப் போன DVD-க்களை   கணினியில் சுழலவிட்டு படம் பார்க்கத் தொடங்கினாள்.
......
கண்களைத் திறக்க முயற்சித்தாள் .கணவரின் உருவம் நிழழைப் போல் கண்முன் தோன்றியது.ஏதோ பேசியது நிழல்.கனவு காண்பதைப்போல் இருந்தது.ஆனால் நிழல் தொடர்ந்து பேசியது.சிறிது நிமிடத்திற்குப் பிறகு நன்றாகவே கண்களைத் திறந்தாள்.

என்ன தூங்கிட்டியா ? கணவன் சிரித்தபடி எதிரில் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தான்.

நீங்க எப்போ,எப்பிடி உள்ள வந்தீங்க? ஆச்சர்யத்துடன் வினவினாள்.

ம்ம் ..கதவு வழியாதான்,கிண்டலடித்தான்.திருடன் வந்தா கூட தெரியாது போல என்றான் கணவன்.

அப்பொழுதுதான் "ஜெட் லாக்"கினால்  தான்  அதிக நேரம் உறங்கிவிட்டதை உணர்ந்தாள்.

அடுத்த ஓரிரு தினங்களில் கேபிள்,இன்டர்நெட் அனைத்தும் வந்துவிட்டது.ஆனால் என்ன பார்ப்பது என்று தெரியவில்லை.சிறிது நேரம் ஆங்கில நாடகங்களைப் பார்த்தாள்.ஒரே வீட்டில் அனைத்து கதாப்பாத்திரங்களும் இடை விடாது பேசின,சிரிப்பொலியும் பின்னணியில் வந்தது.இதை sit -com என்றனர்.எதுவும் விளங்கவில்லை.சிறிது நேரம் கணினியில் சன் டிவி பார்த்தாள்.அமைதியைக் கலைக்க பாடல்களைக் கேட்டாள்.பெரிய குடும்பத்தில் பிறந்ததாலும்,சில காலம் கூட்டுக்குடும்பத்தில் வசித்ததாலும் அக்கம் பக்கத்தாரிடம் பேசி பொழுதைப் போக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தது.ஆனால் அவர்கள் அவ்வப்போது வந்து இவளிடம் பேசிவிட்டுச் சென்றனர்.கார் இல்லாததால் மாலை நேரங்களிலும்  வெளியில் செல்ல இயலவில்லை.

.....

 இப்படியாக ஒரு மாதம் கடந்து விட்டது. அந்த வாரத்தில் நண்பர்களுடன்  நயாகரா செல்லத் திட்டமிட்டனர்.ஏழு மணி நேர கார் பயணம்.அரசுப் பேருந்தில் பயணித்த அனுபவம் இருந்ததால் கார் பயணம் சுகமாகவே இருந்தது. ஆனால் அவளுடைய வில்லன் தங்கியிருந்த விடுதியின் காலை உணவு வேடத்தில் வந்தது.காலை உணவு buffet  முறையில் வைக்கப் பட்டிருந்தது.நிறைய வகைகள் இருந்தது ஆனால் அனைத்தும் இனித்தது.கணவன் எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் உண்ணவில்லை.ஆப்பிள் மட்டும் சாப்பிடுவதாகவும் அதையும் அறிந்து கொடுக்க வேண்டும் என்றாள்.அவன் கடினப்பட்டு அங்கிருந்த பிளாஸ்டிக் கதியால் துண்டுகளாக்கினான்.அவனுடைய நண்பர்கள் அவனை கேலியும்,கிண்டலும் செய்தனர்.

......

அடுத்து வந்த மாதங்களில் இலையுதிர்  காலத்தை ரசிக்க கார் பயணம் மேற்கொண்டனர்.அப்பொழுதும் அதே காலை உணவுப் பிரச்சனைத்தான்.இந்த முறை பிளாஸ்டிக் கத்தியால் பழத்தை துண்டாக்க முயன்ற கணவனின் கையை கத்தி பதம் பார்த்தது.கோபமடைந்த கணவன்,"இனிமே ஒழுங்கா breakfast சாப்பிடு இல்லேனா பட்டினி கிட"என்று கடிந்து கொண்டான்.கண்களில் பொல பொல வென்று கண்ணீர் கொட்டத் தொடங்கியது.கணவன் பதறிப் போனான்.சமாதனப் படுத்தினான்.தன் மனைவி இன்னும் சிறு குழந்தையைப் போல் இருப்பதை உணர்ந்தவனாய் சிரித்தான்.

.........


குழந்தை பீறிட்டுக்  கொண்டு அழுதது.திடுக்கிட்டு நிகழ்காலத்திற்கு இழுக்கப்பட்ட அவள் கடிகாரத்தைப் பார்த்தாள்.கடந்த கால நினைவில் மூழ்கிப் போனதை நினைத்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். வெளியில் மழை  பெய்து கொண்டிருந்தது. தூக்கம் கலைந்து அழும் மகனை  தூக்கிக்கொண்டு  பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கும்  மகளை  அழைத்து வருவதற்காக ஆயத்தமானாள்.

.......

இப்பொழுதெல்லாம் விடுதியில் தங்க நேர்ந்தால் காலை சிற்றுண்டியை ஒரு கை பார்க்காமல் அவள் விடுவதில்லை.அவளுடைய கணவன் கூட கிண்டல் செய்வதுண்டு.ஆங்கில நாடகங்களையும் ரசிக்கத் தொடங்கினாள்.எந்த சமையல் பாத்திரம் நன்றாக இருக்கும்,எந்த கடைகளில் விலை மலிவு அனைத்தும் அத்துப்படி.காலம்  அவளை மாற்றிவிட்டதையும்,இந்த
அந்நியதேசம் அவளுடைய தேசமாக ஆகிவிட்டதையும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா என்ன?

.............

Saturday, August 23, 2014

Little piece of Advice


 
        It was one of our usual evenings.Me and my dear friend had finished our classes and walking back to our little den(hostel room).As we were talking and strolling down the path suddenly got distracted by the cigarette smoke.When we looked there was a man walking in front of us,spreading all the benefits(diseases) of the cigarette.More than that we were shocked to see the baby(less than a year) which he was holding  in his left hand whereas a well lit cigarette in his right.We started scolding him by ourselves.

My friend asked me, who is going to tell him the effects of "passive smoking".

May be we can... I answered.

      but she refused and said, I am little scared and moreover he doesn't look like he is going to listen to us.He may even scold us back.

 Then how is he going to find out the harm he is causing to that baby? I asked.

Do u have the nerve? she questioned.

I don't know,I am going to find out..I replied and didn't wait for her.

           Started walking towards the man and called him ,'brother' which made him to stop.I started my conversation like this "I don't want to advise you to quit smoking but the least u can do is not to smoke around the baby".He was quietly listening to me.I continued ... inhaling your smoke will affect the baby's health as strong as yours and it also proved that passive smoking will affect the hearing in babies.He didn't say a word but he put the cigarette down and nodded his head.Then he walked away from me.By then my friend was standing closer to me,firmly holding my shoulders.

        she looked at me surprisingly and congratulated me for taking the step.she also said (joked),"Thank god he did not slap you otherwise you would have lost your hearing" which made the moment much lighter.we didn't share this incident to anyone until now.That day my heart was filled with a kind of feeling which could not be described by words.I am not sure what got me going that day may be the innocent face of the baby.I didn't do it to simply prove myself to my friend but it gave me the sense of satisfaction(not self pride) which is greater than anything.

     I learned two best things in my life on that day,how to confront the inner fear and there are simple ways to contribute to the society.If my words had a bit influence on him, he would have stopped smoking around the baby.well.... at least I wanted to believe that way!!!!

Friday, August 8, 2014

கடைக்குட்டி

         ஒரு பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தால்  எப்படி இருக்கும்? நான் என் தம்பியின் அனுபவத்தில் இருந்து பேசுகிறேன்.மற்றவர்களின் தவறில் இருந்து நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளல்லாம்.கடினமான வீட்டுப்பாடங்களையும் சகோதர,சகோதரியின் உதவியால் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுக்கலாம்.ஆனால் தனக்கென்று ஓர் தனி அடையாளத்தை உருவாக்க கடினமாக உழைக்க வேண்டும்.தன்னிச்சையாக செயல்படுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் இழக்கிறார்கள்.

       ஒரு நாள் என் தம்பி தான் கூடைபந்து  விளையாட்டில் சேரப்போவதாகக் கூறினான் ஆனால் நாங்கள் பள்ளிமுடிந்தவுடன் அதற்கான  பயிற்சியில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்றும் வீட்டிற்கு திரும்பும் பேருந்தை தவறவிட வேண்டியிருக்கும் என்றும் கூறினோம்.கலைந்தது அவனது கனவு.நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஆனால் அதை அவனுடைய சுய அனுபவத்திலிருந்து கற்கத் தவறினான். மற்றொரு நாள் ஓவியம் வரைவதில் ஆர்வம் இருப்பதாக கூறினான்.நாங்கள் அனைவரும் அவனை ஊக்கப்படுத்தி ஓர் நாளிதழ்  நடத்திய ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள வைத்தோம். .அவனுடைய ஓவியத்தை மற்றொரு போட்டிக்கும்  அனுப்பி ஆச்சர்யப்படுதினோம்.

      கடைக்குட்டிகளுக்கு எந்த ரகசியத்தையும் வைத்துக்கொள்ள இயலாது.அரிதாக  அவர்களுக்குக் கிடைப்பது தனிமை .  என்னுடைய  தம்பிக்கு அப்போது 7 வயது . தான் டைரி எழுதப் போவதாக அறிவித்தான். அதை எங்களிடம் இருந்து காப்பாற்ற கடினமாக போராடினான்  ஆனால் அவனுக்குத் தெரியாமல் அதைப் படித்துவிட்டோம்.அவனிடம் அதை வெளிக்காட்டவில்லை .மறுநாள் கைதவறி கொட்டிய எண்ணையை துடைக்க அவனுடைய நாட்காட்டி சேகரிப்பை என் தங்கை தவறுதலாக பயன்படுதிவிட்டாள் .

        கோபமடைந்த என் தம்பி அவளைப் பற்றி கையேட்டில் எழுதி மறைத்து வைத்துவிட்டான்.வழக்கம் போல்  அதைப் படித்த எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.  (என்ன இருந்தது என்று அறிய ஆர்வமா ?நாட்காட்டி சேகரிப்பை பாழாக்கிய அக்காவை இன்றுமுதல் வெறுக்கிறேன் !!!) அவனுடைய டைரி இரகசியம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதை உணர்ந்து கோபமடைந்தான்.ஆனால் எங்களால் தான் சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை.பல முறை பல இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவனை காப்பாற்றி உள்ளோம்,சில முறை அவனுடைய நண்பர்கள் முன்னிலையில் சங்கடத்தில் ஆழ்த்தியும் உள்ளோம் .

         எங்களிடமிருந்து  குறுக்கெழுத்து எழுதும் ஆர்வம் அவனைப் பற்றிக் கொண்டது.ஆங்கில வழிக்கல்வி பயின்றதால் தமிழில் விடை அறிய எங்களின் உதவியை நாடினான் நாளடைவில் அவனே எழுதக் கற்றுக்கொண்டான்.எங்களுக்குள்  யார் முதழில் வார நாளிதழை படித்து முடிப்பதென்று கடும் போட்டி இருந்தது இதனால் என் முதல் தம்பி  நாளிதழை இவனுடைய  புத்தகப்பையில் மறைத்து வைத்துவிட்டு மறந்து விட்டான் .

      மறுதினம்  வகுப்பறையில் பையைத் திறந்த அவனுக்கு அதிர்ச்சி. எங்கே பக்கத்திலிருக்கும் மாணவன் பார்த்துவிடுவானோ என்று அஞ்சியிருக்கிறான்.
மாலையில் எங்களைத் திட்டித்தீர்த்துவிட்டான் .வழக்கம்போல் நாங்கள் சிரிப்பலையில்  மூழ்கினோம். இன்று வரை என்னுடைய மூத்த தம்பி அவனை கிண்டல் செய்து முடிக்கவில்லை ......

       என் தம்பியின் கண்ணாடி பிம்பமாக காட்சியளிக்கும் என் மகனைக் காணும் பொழுதெல்லாம் என் நினைவுகள் என்னை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.அதன் விளைவே இந்தக் கட்டுரை !!!!!

Friday, August 1, 2014

First Birthday


          Our marriage was only a month old when my first B'day(as a wife) came along.My husband kept asking me what do I want as a gift?.since we got married a month ago I got so many dresses and new jewels so I said I don't want anything.I also added that I don't want to make it a habit (giving gifts).Also gave a big lecture about how family members don't give gifts to each other (really?) and I wanted to stay that way.He said OK.

         Along the way I kept bragging about my favorite color and how I wanted to have a dress on that color.I was dropping hints by showing that particular color in the newspaper ads and on TV. But I also said to him that don't get the wrong idea of buying me the dress on my B'day.

         On that day we went to bed as usual and I pretended like sleeping and hoping that he would wake me up at 12 o clock midnight.Of course he did with a gift in his hand.I was floating in the air with all the excitement in the whole wide world. By the size of the gift wrapper I figured out that it was not a dress.

        Thought might be the jewelry, started asking him why would he bought me the expensive jewelry. He calmly said,"open it" with the greatest smile on his face. By opening it I got so disappointed(hit the rock bottom). Here I have to remind you about my husband's new found interest "photography"(bought a new SLR).

       There it was...lying in my hands, the well framed picture of me taken at the time of our honeymoon by my husband. He looked quite happy(confident) about the present.I asked him, "what kind of present is this"? He replied as the most "perfect" one. He continued by saying that how I looked so beautiful in that picture and no one ever captured me this pretty. yeah...yeah you guessed it right.My madness had flew away and I was blushing and looked at him with my reddish cheeks.

        I realized something on that day  which made me really happy and little proud.He is not only fascinated by the photography but also by me too!!! I couldn't believe that eight years have already gone by....because our fascination for each other is still the same.... so fresh like a month old!!!